Print this page

அட்டலுகம சிறுமியை புதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று சந்தேகநபர் செய்த காரியம்

பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் ஒன்பது வயதுடைய பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரகம, அட்டலுகம முஸ்லிம் காலனி பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமி கோழிக்கடைக்கு சென்ற போது சந்தேக நபர் ஐஸ் போதைபொருள் குடித்துள்ளதாகவும் சந்தேகநபர் சிறுமிக்கு முன்னதாக கடையை விட்டு வெளியேறி புதருக்கு அருகில் மறைந்திருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறுமி  கோழி இறைச்சியுடன் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரை கடத்தி அருகிலுள்ள காட்டிற்கு இழுத்துச் சென்று, அவரது உடலைத் தொட்டு வன்புணர்வு செய்ய சந்தேகநபர் முயற்சி செய்துள்ளார். அங்கு கூச்சலிட்டு சந்தேக நபரின் பிடியில் இருந்து தப்பிக்க சிறுமி  முயன்றுள்ளார். 

பின் சிறுமியின் வாயில் துணியை செருகி, சில மீட்டர் தூரம் இழுத்துச் சென்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தள்ளி, அதில் மூழ்கி சிறுமியின் முதுகில் மண்டியிட்டு இறக்கும் வரை சந்தேகநபர் இருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.