Print this page

தமிழக முதல்வரை சந்தித்து மிலிந்த மொரகொட பேச்சு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் சென்னையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையினை நிலைநாட்டும் வகையில், கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே உகந்த தருணம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

எனினும், இதற்கு பிரதமர் நரேந்திர மோடி எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை.