ரொட்டி தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத VAT செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பன் மற்றும் ஷார்ட்டிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உரிய வாட் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒரு பன் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அவர் கூறுகிறார்.
சிறு பேக்கரி உரிமையாளர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அனைத்து பேக்கரி உரிமையாளர்களில் 60 சதவீதத்தினர் உரிய வரியை செலுத்த வேண்டும் என்றார்.
மேலும், பேக்கரி உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பேக்கரி தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, பேக்கரி உரிமையாளர்கள் மார்கரின் மற்றும் பால் பவுடர் போன்ற மூலப்பொருட்களுக்கு 12 சதவீத VAT செலுத்துகின்றனர்.
எனவே பேக்கரி பொருட்களுக்கு VAT வரியை நீக்கி நிவாரணம் வழங்க வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சுமார் 2000 சிறிய அளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.