Print this page

எமக்கு சூதாட்ட ராஜா வேண்டாம் - தம்மிக்க பெரேரா வீட்டின் முன் ஆர்பாட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தம்மிக்க பெரேரா வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் தொகையை செலுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

'எமக்கு சூதாட்ட ராஜா வேண்டாம்', 'எங்களுக்கு குப்பை மேடு வேண்டாம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.