வியத்மகவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏமாற்றி விட்டதாக அந்த அமைப்பின் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியாக விரக்தியடைந்துள்ள தானும் எனது உறுப்பினர்களும் டலஸ் அழகப்பெரும உட்பட ஏனைய கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் புதிய அரசியல் பாதையில் பிரவேசிப்போம் என கொடஹேவா கூறுகிறார்.
இணைய சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.