Print this page

21ஐ ஆதரிக்க நிபந்தனை விதிக்கும் மஹிந்த

பாராளுமன்றத்தை பலப்படுத்தும் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் திருத்தங்களை பொதுஜன பெரமுன 21வது ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அதிகாரம் இல்லாத பிரதமரை நியமிப்பதை எதிர்ப்பதாகவும் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் திருத்தத்தை ஆதரிப்பதில் தனக்கு பிரச்சினையில்லை எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.