Print this page

நாட்டில் ஒரு நாள் மட்டுமே பெட்ரோல் டீசல் கிடைக்கும்

நாட்டில் ஒரு வாரத்திற்கு எரிபொருள் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும் தற்போது டீசலுக்கு இரண்டு நாட்களும், பெற்றோலுக்கு ஒரு நாளுமே உள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பிரதமரின் அறிக்கையினால் நாட்டில் எரிபொருள் வரிசைகள் அதிகரித்து, தேவையும் அதிகரித்துள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், அதனை மக்களுக்குத் தேவைக்கேற்ப விநியோகிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களாக எரிபொருள் கிடைக்காத எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று இருப்பதாகவும், நாட்டில் எரிபொருள் நெருக்கடி உக்கிரமடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இந்திய கடன் வசதியின் கீழ் இலங்கை வந்துள்ள கடைசி டீசல் கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளது. ஆனால் மற்றொரு எண்ணெய் கப்பல் எப்போது வரும் என்று பெட்ரோலிய அமைச்சகம் தெரிவிக்கவில்லை.