Print this page

கொழும்பில் பாடசாலைகளுக்கு பூட்டு

கொழும்பு நகர எல்லையிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சிக்கல்கள் இல்லாத அனைத்து கிராமப்புற பள்ளிகளையும் அதிபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

புறநகர் பள்ளிகளும் வாரத்தில் ஒன்லைன் கற்பித்தலை வழங்க முடிவு செய்துள்ளன.