Print this page

'கைதானவர்கள் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை’

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் இலங்கையர்கள் என்று கூறப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் மெட்ரோபோலிடன் பொலிஸாரினால் அந்த நாட்டு தூதரகத்திடம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.