Print this page

காலிமுகத்திடலில் பிக்கு, பெண்கள் உள்பட 21 பேர் கைது

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை லொரியில் ஏற்றி பொலீசார் கைது செய்தனர்.

அவர்களில் ஒரு பௌத்த துறவியும் நான்கு பெண்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். 

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்ததுள்ளதுடன் மற்றுமொரு நுழைவாயிலையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறைந்துள்ளனர்.