Print this page

பாடப் புத்தகங்களுக்கான காகிதங்கள் இலங்கை - இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் !

எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான காகிதங்கள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு பாடசாலை சீருடைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவது குறித்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சீன அரசாங்கத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.