Print this page

மஞ்சள் எங்கள் நிறம் யாரும் பயன்படுத்த கூடாது சிறுபிள்ளைத்தனமாக - சஜித் கட்சி உறுப்பினர்

 
 
மஞ்சள் எங்கள் நிறம் யாரும் பயன்படுத்த கூடாது சிறுபிள்ளைத்தனமாக - சஜித் கட்சி உறுப்பினர் .
 
மஞ்சள் நிறத்தை அரசியல் நோக்கங்களுக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நிறம் ஆகும் என அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
 
SJB பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன ஊடகவியலாளர் மாநாட்டில், மஞ்சள் நிறமானது தமது கட்சியின் உத்தியோகபூர்வ நிறம் என்பதனால், எந்தவொரு அரசியல் விடயங்களுக்கும் எவரும் மஞ்சள் நிறத்தை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்தார். 
 
பிரேமதாச மைதானத்தில் இலங்கை - அவுஸ்திரேலியா ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைக் காண வருபவர்கள் அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி செலுத்துமாறு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
 
“இந்த இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலியர்களுக்கு நன்றி செலுத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, ஆனால் எமது நிறத்தைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள். SJB இன் உத்தியோகபூர்வ நிறம் மஞ்சள், அதே சமயம் நாங்கள் UNP பிரிந்து சென்ற குழு என்பதை அடையாளப்படுத்த பச்சை நிறமும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாள் போட்டிக்கு செல்பவர்களை மஞ்சளில் வருமாறும், பின்னர் காலி முகத்திடலுக்குச் செல்வோர் போட்டி முடிந்து அரசை கவிழ்க்கும் போராட்டத்தில் ஈடுபடுமாறும் சமூக ஊடகங்களில் கூறுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். நாங்கள் SJB அரகலயாவின் (போராட்டத்தின்) சிற்பிகள் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம், என்றார்