Print this page

பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள் இதோ

மேல் மாகாணத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் இரவு 9.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி டி விக்ரமரத்ன இன்று (ஜூலை 08) அறிவித்துள்ளார்.

இதன்படி, நீர்கொழும்பு பொலிஸ் பகுதி, களனி பொலிஸ் பகுதி, நுகேகொட பொலிஸ் பகுதி, கல்கிசை பொலிஸ் பகுதி, கொழும்பு வடக்கு பொலிஸ் பகுதி, கொழும்பு தெற்கு பொலிஸ் பகுதி மற்றும் கொழும்பு மத்திய பொலிஸ் பகுதியில் மறு அறிவிப்பு வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.