Print this page

லங்கா IOC நிறுவனம் இன்று 100 பவுசர்களில் எரிபொருள் விநியோகம்

திருகோணமலையிலிருந்து நாடு பூராகவும் லங்கா IOC நிறுவனம் இன்று 100 பவுசர்களில் 1.5 மில்லியன் லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

லங்கா IOCயின் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் இவ் அறிக்கையில் அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயங்கவுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
 
1990 அம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையில் டீசல் வழங்கப்பட்டு வருகின்றது .
 
மட்டக்களப்பு போதானா  வைத்தியசாலை ஆம்புலன்ஸ் உட்பட சில வாகனங்களுக்கு  மட்டக்களப்பு IOC  டீசல் வழங்கி வருவதாக மட்டக்களப்பு IOC உரிமையாளர் முத்துக்குமார் செல்வராஜா தெரிவித்தார்.