Print this page

ரணில் நாட்டின் புதிய ஜனாதிபதியானார்!

கடந்த பொது தேர்தலில் படுதோல்வி அடைந்து தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்சமயம் நாட்டின் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

இலங்கை அரசியல் யாப்புக்கு அமைய ஜனாதிபதியின் பதவி வெற்றிடமாகும் போது பிரதமர் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Last modified on Wednesday, 13 July 2022 08:03