Print this page

பெண் அதிகாரியின் தயவில் நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய

அமெரிக்க தூதரகத்தின் பெண் அதிகாரியின் தயவில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருக்கும் சவேந்திரசில்வா தனது பணிகளை செய்து வருவதுடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டங்களை ஆதரித்து பல அறிக்கைகளை வெளியிட்டு தனது வேலையை திறமையாக செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை படையினர் தனது கடமைகளை சரிவர செய்ய தவறும் பட்சத்தில் அமெரிக்க படைகளை இலங்கையில் களமிறக்கவும் ரணில் தயங்கமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.