Print this page

104 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபா முன்பணம்

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கு தேவையான வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிச கட்சி தெரிவிக்கின்றது.

ஏற்கனவே 104 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபா முன்பணம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற குழப்பமான சூழ்நிலையில் வீடுகள் இழந்த உறுப்பினர்களுக்கு தளபாடங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னிலை சோசலிசக் கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Tuesday, 19 July 2022 12:47