Print this page

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் 4 பீடங்களுக்கு பூட்டு

December 30, 2018

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில், நான்கு பீடங்கள் திகதி குறிப்பிடப்படாமல் மூடப்பட்டுள்ளன என அந்தப் பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்தார்.
சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள சாஸ்திர பீடம், முகாமைத்துவப் பீடம்,பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானப் பீடம் ஆகியனவே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.
அந்தப் பல்கலைக்கழகத்தில் வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேரின் வகுப்புத் தடையை நீக்குமாறு கோரி, மாணவர்கள், நிர்வாகக் கட்டிடத்தை கடந்த 27 ஆம் திகதியன்று
இதனையடுத்தே, மேற்படி முடிவு எட்டப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Last modified on Friday, 04 January 2019 14:23