Print this page

ரணிலுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் முக்கிய சந்திப்பு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்திக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்