Print this page

மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி

ரத்கம தேவினிகொட பிரதேசத்தில் இன்று (31) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய மீன்பிடி படகு உரிமையாளர் ஆவார்.

ரத்கம தேவினிகொட பிரதேசத்தில் உள்ள படகு உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு வலை கியர் எடுப்பதற்காக வேனில் மற்றுமொரு நபருடன் வந்துள்ளார்.

அப்போது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள், வலைகளை ஏற்றிக் கொண்டிருந்த அவரை துப்பாக்கியால் சுட்டதாக, பொலீசார் தெரிவித்தனர்.

டி. 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.