Print this page

சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக பல அரசியல் கட்சிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள்

அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கியது

நேற்று (02) சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக பல அரசியல் கட்சிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இது இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் முதல் கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் இரண்டாவது கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், செயலாளர் நாயகம் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மூன்றாவது கலந்துரையாடல் தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்று (03) பல தரப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.