Print this page

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ள பொன்சேகா தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கவனம்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, விடுத்துள்ள கருத்து தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பொது பாதுகாப்பு அமைச்ச திரான் அலஸ் இதனை தெரிவித்தார்.

அது தொடர்பில் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா தீவிரமான கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் அது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Last modified on Thursday, 04 August 2022 06:39