Print this page

கம்பஹா பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் அழகு கலை நிலையமொன்றில் இருந்த போது அங்கு வந்த துப்பாக்கிதாரி இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவ​ரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.