Print this page

காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழு நாட்டை விட்டு ஓட முயர்ச்சி

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தலைவர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

பல தடவைகள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான 31 பேரின் வெளிநாட்டு பயணத்திற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

இவ்வாறான மேலும் பல நபர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றதுடன், அவர்களை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்குமாறு கோரிக்கை விடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.