Print this page

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்திற்கு சீனா வைத்தது ஆப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சீனாவின் எக்சிம் வங்கியிடமிருந்து பணம் விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக குறித்த திட்டம் தொடர்பில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதை இடைநிறுத்த இலங்கை தீர்மானித்திருப்பதும் சீனாவின் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீன பிரஜைகள் வெளியேறத் தொடங்கியுள்ளனர், இதனால் உள்ளூர்வாசிகளின் சுமார் 2000 வேலைகள் ஆபத்தில் உள்ளன

திட்டத்தின் கட்டுமானம் செப்டம்பர் 2020 இல் தொடங்கியது மற்றும் 2024 இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் சுமார் 33 பில்லியன் ரூபா மூலம் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.