Print this page

அடி வயிறு வலி என சிகிச்சைக்குச் சென்ற 15 வயது மாணவி கர்ப்பம்!

15 வயதுடைய சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிடோகம பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு வருடத்திற்கு முன்னர் சந்தேக நபருடன் காதல் உறவை வைத்திருந்ததாகவும், சிறுமியின் தாய்க்கு அது பிடிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாய் கூலி வேலைக்குச் சென்றதையடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பு தனது காதலன் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் உடலுறவு கொண்டதாகவும், பின்னர் பல சந்தர்ப்பங்களில் உடலுறவு கொண்டதாகவும் சிறுமி அளித்த வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சைக்காக நாச்சதுவ வைத்தியசாலைக்கு சென்ற போது சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுநீர் மாதிரியை எடுத்து பரிசோதித்து சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிடோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.