Print this page

ஐ.நா சபை உறுப்பு நாடுகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த அமர்வில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3 முதல் 5 வரை கட்டுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை தனது 193 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

நியூயோர்க் நகரில் கோவிட் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் அரசியல் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் போது பிரதிநிதிகளின் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.