Print this page

2 நாட்களில் 10 மரணங்கள்

கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் நேற்று (24) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (25) பிற்பகல் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆறு இறப்புகள் மற்றும் நேற்று முன்தினம் பதிவான நான்கு இறப்புகளுடன் இரண்டு நாட்களில் 'கோவிட்' நோயால் பாதிக்கப்பட்ட பத்து பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 5 பேரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட ஒருவரும் அடங்குவதாகவும் அவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.