Print this page

ரஞ்சன் எடுத்துள்ள திடீர் முடிவு

அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்மொழியப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு தூதுவர் பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு சேவை செய்ய பதவிகள் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்க பதவியை ஏற்றுக்கொண்டால் அது ஒப்பந்தம் போடுவது போல் ஆகலாம் என்றும் அவர் கூறினார்.

ரஞ்சன் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியின் நிபந்தனை மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.