Print this page

தமிழக மீனவர்கள் சிலர் இலங்கை கடற்பரப்பில் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி ஆறு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அவர்களது இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை ஒரு மாதத்தில் இரண்டாவது சம்பவம் என அதிகாரப்பூர்வ அறிக்கை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

மன்னார் தீவின் வடமேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள குடியேற்றமான தலைமன்னார் கடற்பகுதியில் சனிக்கிழமை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரில் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மன்னாரில் உள்ள மீன்வளத்துறை பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.