Print this page

சற்றுமுன் இலங்கையை வந்தடைந்த பவர்!

September 10, 2022

சமந்தா பவர் சற்றுமுன் (10) இலங்கைக்கு வந்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் நிர்வாகியான சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வந்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்குவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த காலப்பகுதியில், அவர் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.