Print this page

மின்வெட்டு நேரம் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

September 10, 2022

இலங்கைக்கு நிலக்கரியை வழங்குவது தற்போது சாத்தியமில்லை என குறைந்த விலைக்கு வழங்கிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சட்டரீதியாக தீர்க்கப்படும் வரை இந்த தீர்மானத்தை மேற்கொள்வதாக இலங்கையில் உள்ள நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் தேவையான நிலக்கரி கையிருப்பு நாட்டிற்கு கிடைக்காவிட்டால், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அப்போது ஏழு அல்லது எட்டு மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு செய்ய வேண்டியிருக்கும் என்று ஆணைக்குழு கூறுகிறது.

Last modified on Saturday, 10 September 2022 14:28