Print this page

நாட்டின் நிலைமைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் மத்திய வங்கி ஆளுநர்

September 11, 2022

அரச கூட்டுத்தாபனங்களுக்கு சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்து சபை போன்ற நிறுவனங்கள் தேவையை பூர்த்தி செய்யும் பொது நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும், அந்த நிறுவனங்களினால் ஏற்படும் பாரிய நட்டத்தை அரசாங்கத்தால் இனி தாங்க முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.