Print this page

கோட்டாவை போல் அல்லாது ரணில் பதவியில் இருந்து விரட்டப்படும் நிலை மிக பயங்கரமாக இருக்கும் - ஹிருணிகா எச்சரிக்கை

September 13, 2022

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை விட மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமகி வனிதா பலவேகய தலைவருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ரணிலின் வெளியேற்றம் விரைவில் நிகழும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விட அது மிகவும் பயங்கரமாக இருக்கும். அவர் உடனடியாக நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம்” என்று ஹிருணிகா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"மக்கள் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கும் போது மற்றொரு போராட்டம் வழியில் உள்ளது. முக்கிய தொழிலதிபர்களின் வீடுகள் ஆதரவற்ற மக்களால் எரிக்கப்படும் மற்றும் பணக்காரர்களுக்கு சொந்தமான அனைத்து செல்வங்களும் ஆதரவற்றவர்களாகி வரும் ஏழைகளால் பறிக்கப்படும், ” என்று அவர் மேலும் கூறினார்.

"சில நாட்களுக்கு முன்பு பத்தரமுல்லையில் உள்ள ஒரு பணக்கார வீட்டில் இருந்து சில பொருட்கள் களவாடப்படடது போலவே பணக்காரர்களுக்குச் சொந்தமான சொத்துக்களையும் அபகரித்தல் ஏற்கனவே தொடங்கிவிட்டது," என்று அவர் கூறினார்.

பிரேமலால் ஜயசேகரவை இராஜாங்க அமைச்சராக நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்த ஹிருணிகா, இந்த நடவடிக்கையை ஐ.தே.கட்சியினர் எவ்வாறு வரவேற்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

"ஜனவரி 4, 2022 அன்று நடந்த பேரணியில் தொடங்கொட என்ற யூ.என்.பி ஆதரவாளரைக் கொன்றதற்காக ஜெயசேகர தான் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார். மேலும் இந்த நடவடிக்கையை யூ.என்.பி. ஆதரவாளர்கள் எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது," என்று அவர் கூறினார்.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில்  விக்கிரமசிங்க பங்கேற்பதால் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

Last modified on Tuesday, 13 September 2022 14:41