Print this page

தவணை கட்டண முறையில் செருப்பு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை

September 16, 2022

இந்நாட்டில் காலணிகளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், சில காலணி வியாபாரிகள் தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில் காலணிகளை விற்பனை செய்கின்றனர்.

இணையத்தில் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம், அவர்கள் காலணிகளை தவணை முறையில் பெறலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். 

இலங்கையில் அந்த அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது.