Print this page

ராவணன் காலம் தொடக்கம் மன்னர்கள் கஞ்சா பயன்படுத்தியதாக டயானா சர்ச்சை பேச்சு

September 17, 2022

கஞ்சா என்பது எமது வரலாற்றுடன் இணைந்த ஒன்று எனவும் அதனை நாம் நல்ல  மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்வதன் ஊடாக  நிறைய அந்நிய செலாவணி சம்பாதிக்க முடியும், ஆனால் தெருக்களில் கஞ்சா புகைக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், வரலாற்றின் மன்னர்கள் கூட கஞ்சா பயன்படுத்தியதாகவும், ராவணன் காலத்திலிருந்தே கஞ்சா பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.