web log free
September 16, 2025

மூன்று நாட்களில் வெறும் 70 லட்சம் வருமானம்

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்கள் பாவனைக்காக திறந்து வைத்ததன் பின்னர் முதல் வார இறுதியில் (சனிக்கிழமை) மாத்திரம் 31 லட்சத்துக்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுரம் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். 

டிக்கெட், உணவு மற்றும் பானங்கள் மற்றும் பிற சேவைகள் மூலம் வருமானம் கிடைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தாமரை கோபுரத்தின் அதிசயத்தை காண நேற்று (17ம் திகதி) சுமார் ஐம்பது வெளிநாட்டவர்கள் உட்பட 7300 பேர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து செயல் அலுவலர் மேலும் கூறியதாவது: கடந்த 15ம் திகதி முதல், பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்ட மூன்று நாட்களாக கிடைத்த வருவாய், 70 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளதாகவும், இதனை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பதாகவும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd