Print this page

சுயாதீன எம்பிக்கள் எடுத்துள்ள திடீர் முடிவு

September 19, 2022

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுயாதீன எம்.பி.க்களாக செயற்படும் பலர் அதில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் எவ்வாறான அரசியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், அரசாங்கத்துடன் இணைவதற்கான எந்த ஆயத்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதும் கூட எதிர்க்கட்சியின் சுயேட்சை உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சபையின் நடவடிக்கைகளில் அவர்கள் பங்குபற்றுவதில்லை எனவும், அதனை முன்னெடுப்பதில் இருந்து விலகியிருப்பதாகவும் அறியமுடிகின்றது.