Print this page

2025 வரை ரணிலை அசைக்கவே முடியாது, காரணம் இதோ

September 19, 2022

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ராசிபலன் மற்றும் கிரகநிலை மிக பலமானதாக இருப்பதால் 2025 ஆம் ஆண்டு வரையில் அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என பிரபல மூத்த ஜோதிடர் பீ.ஜி.பி. கருணாரத்ன குறிப்பிடுகின்றார்.

யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்தவொரு நபரோ அல்லது குழுவோ முயற்சித்தால் அது பாரிய இரத்தக்களரியில் முடிவடையும் என கருணாரத்ன தெரிவித்தார்.

இந்த மாதம் நாட்டிற்கு மிகவும் சாதகமாக இல்லை என்றும், மீண்டும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்றும் அவர் கூறினார்.

மீண்டும் பொது அமைதியின்மை ஏற்படும் எனவும் அது அரசாங்கத்தையும் அரச தலைவரையும் பாதிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Last modified on Monday, 19 September 2022 02:19