Print this page

கைது செய்யப்படுவாரா சஜித்?

September 26, 2022

2018-2019 ஆண்டுகளில் மத்திய கலாச்சார நிதியம் சட்டத்தை மீறி 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொல்லியல் துறைக்கு பணியமர்த்தியுள்ளது என்று தேசிய தணிக்கை அலுவலகம் கூறுகிறது.

இவர்களின் சம்பளத்திற்காக 106 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்றின் சார்பில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததன் அடிப்படையில் இந்த நிறுவனம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்போது இந்த அமைச்சு சஜித் பிரேமதாசவின் கீழ் இருந்தது. 

Last modified on Monday, 26 September 2022 11:29