Print this page

இம்முறை உயர்தர பரீட்சை பிற்போடப்படுமா?

September 27, 2022

இவ்வருடம் டிசெம்பர் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக இரண்டாம் தடவைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் குற்றம் சுமத்துகின்றனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட 6 மாதங்கள் ஆனதாகவும், 3 மாதங்களில் மீண்டும் அதே பரீட்சையை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வருடம் டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.