Print this page

22ம் திருத்தம் மீதான விவாதம் ஒத்திவைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் நோக்கில் இலங்கையின் அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான பிரதான சட்டமூலத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 6 மற்றும் 7ம் திகதிகளில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டது.