Print this page

சுதந்திரமாக நடமாடும் சிறுத்தைகளால் ஹட்டன் பகுதி மக்கள அச்சத்தில்!

ஹட்டனை அண்மித்த ருவன்புர மற்றும் குடாகம பிரதேசங்களில் சுதந்திரமாக நடமாடும் சிறுத்தைகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தைப்புலிகள் அடிக்கடி தங்கள் பகுதிகளுக்குள் புகுந்து விடுவதாகவும், தாங்கள் தாக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளதாகவும், வேட்டையாடுபவர்களுக்கு இரையாக நேரிடும் என்றும் இந்த கிராமங்களில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

இரவு நேரங்களில் சிறுத்தைப்புலிகள் நடமாடுவதாகவும், அவசர தேவைக்கு வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல செல்லப்பிராணிகள், நாய்கள் மற்றும் கோழிகள் காணாமல் போயுள்ளன, மேலும் இவை இந்த மலைச்சிறுத்தைகளால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.