Print this page

கொழும்பில் புலிகள் குண்டுவைக்க உதவியது ராஜபக்ஷ! வெளியானது அதிர்ச்சித் தகவல்

விடுதலைப் புலிகளால் வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ இருந்ததாக முன்னாள் இராணுவ மேஜர் அசித சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் குண்டுகளை ராஜபக்சேவின் வாகனங்களில் கொழும்புக்குக் கொண்டு வந்ததாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நெருக்கமாக இருந்த அனைவரையும் புலிகளின் உதவியுடன் கொன்றதாக கூறும் அவர், தம்மை வாயடைப்பதற்காக ராஜபக்ச 5 முறை கொல்ல முயற்சித்ததாக அவர் கூறுகிறார்.

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.