Print this page

காணாமல் போன கடற்படைக் கப்பலில் இருந்து சமிக்ஞை

செப்டம்பர் 17ஆம் திகதி முதல் காணாமல் போன கடற்படைக் கப்பலுடன் ஆறு கடற்படை வீரர்களுடன் தொடர்பாடல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஐந்து மாலுமிகள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொண்ட கடற்படைக் குழுவுடனான கப்பல் செப்டம்பர் 17 முதல் தொடர்பை இழந்ததை அடுத்து கடற்படை தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

செப்டம்பர் 16 அன்று தங்காலை கடற்கரையில் வழக்கமான ரோந்து பணிக்காக கப்பல் அனுப்பப்பட்டது.

காணாமல் போன கப்பல் தொடர்பில் அண்டை நாடுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

Last modified on Tuesday, 18 October 2022 09:56