Print this page

கஞ்சாவுக்குப் பச்சைக் கொடி

நாட்டில் கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் எதிர்வரும் கூட்டங்களில் இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், நாட்டின் வருமான மட்டத்தை உயர்த்தும் வகையில் இரவுப் பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.