Print this page

நாட்டில் ராஜபக்ஷக்கள் அற்ற ஜனாதிபதித் தேர்தல் அடுத்து நடைபெறும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிட ராஜபக்ச ஒருவர் இருப்பாரா என்பதை கூற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அந்தளவுக்கு ராஜபக்சக்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளதாக எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நேரத்தில் தமக்கு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி கிடைக்காது எனவும், களத்தில் இறங்கி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தற்போது சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் ராஜபக்சவுடன் ஏற்பட்ட கோபம் முடிவுக்கு வரும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.