Print this page

பல அரசியல்வாதிகளின் கருப்பு பணம் திலினியிடம்

November 01, 2022

நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணுடன் ராஜபக்ச அரசாங்கத்தில் உள்ள பெருமளவானோர் நேரடித் தொடர்பில் இருப்பதாக முன்னாள் இராணுவ அதிகாரியான ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் திலினியின் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் இந்த பெண்ணிடம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகள் தொடர்பில் இணைய சேனலொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.