Print this page

தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட வசந்த முதலிகே

November 02, 2022

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலி இன்று (02) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவிற்கு முதலிகே அழைத்து வரப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று (02) எதிர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.