Print this page

மெது மெதுவாக குறைந்த கேஸ் விலை மீண்டும் உயர்வு

November 06, 2022

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த புதிய விலைகள் இன்று (06) இரவு முதல் அமலுக்கு வரும்.

12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200-250 வரை உயரும்.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், எரிவாயு விலையில் திருத்தம் இன்று (06) இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது நிறுவனத்திலும் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.